அசினின் கனவிலே வந்த 81 வயது கிழவன்

உந்த பாழ் பட்டுப்போன சினிமா காரியால இண்டைக்கும் ஒரு வேலையை மறந்துட்டன் பாருங்கோ. எப்பிடியாவது இந்த பாழா போன கரச்சல எல்லாருக்கும் சொல்லோணும் எண்டு இண்டைக்கு நான் ஒரு முடிவு எடுத்துபோட்டன். சும்மா இருக்கேக்க புல்லட்டின் வலையை மேயுரதால இதையும் வலையில சொல்லி போடா வேணும் எண்டு நினைச்சு  என்ட பேரனிட்டை ஒரு வலைப்பக்கம் செஞ்சு தரசொல்லி அழுது குளறி சாப்பிடாம இருந்து ஒரு மாதிரி இதை சரிக்கட்டி போட்டன். எண்ட பேரன் சின்ன பொடியன் எண்டாலும் ஆள் ஒரு நப்பி நமசிவாயம் பாருங்கோ அவனும் அவன்ட அம்மாவும் சேர்ந்து (அதுதான் எண்ட மருமோள் ) இந்த கிழவனை சாப்பிடாம இருக்கிறதுதான் நல்லதுண்டு சொல்லி சாகப்பன்னுரதுக்கு முடிவேடுத்துப்போட்டுதுகள்.

எண்ட மோன் வேலையால வந்ததும் அவன்ட காலில ஓடிப்போய் விழுந்து ஐயோ இதுகள் இன்னை சாகொல்ல பாக்குதுகள் எண்டு கத்தி அவனிட்டை என்ர கோரிக்கையை முன்வச்சுட்டன் பிறகு அவன் சொல்லித்தான் எண்ட பேரன் இதை செஞ்சு தந்தவன் சும்மா சொல்லகூடாது என்ட மோன் எனக்கு முன்னால நல்லா நடிப்பான் அதுதான் பாருங்கோ எண்ட மோன் அவன்ட மனிசிக்கு சரியா பயந்தவன் அவள் பாவி ஒருக்கா முறைச்சு பாத்தாலண்டால் உவனுக்கு நிண்ட நிலையில மூத்திரம் போயிடும் அந்தளவுக்கு பயம். எண்ட மோனுக்கே மதிப்பு குடுக்காத உந்த துலைவாள் எப்பிடி இந்த கிழவனுக்கு சாப்பாடு குடுப்பாள் எண்டு ஒருக்கா யோசிச்சு பாருங்கோ சத்தியம்மா சொல்லுறன் எண்ட கதையை கேட்டால் நீங்கள் அழுது போடுவிங்கள் அதால அத நிப்பாட்டி போட்டு விசயத்துக்கு வாறன்.


எண்ட பேரன் பெரிய சத்தாமாத்தான் சினிமா பாட்டுகளை போட்டுட்டு இருந்து பாத்துகொண்டிருப்பன் எனக்கும் பொழுது போகாததால நானும் இடைக்கிட கள்ளமா எட்டி பாப்பன். ஐயோ உந்த கட்டையில போனவளுகள் எல்லாத்தையும் கழட்டிபோட்டு ஆம்பிளைகளோட நிண்டு துள்ளி துள்ளி கட்டிபுடிச்சு ஆடுதுகள் எண்ட பேரனும் உதைதான் பூந்து பூந்து பாக்கிறான் உவண்ட வயசுக்கு உந்த துலைவான் பாக்கிறத பாத்திட்டு கட்டேல போக எண்டு திட்டிக்கொண்டு நான் போய் எண்ட பாட்டுக்கு குப்பற படுத்துட்டன்.

கொஞ்ச நேரத்தால உந்த கட்டைல போனவன் அம்மா ஓடிவா அம்மா ஓடிவா எண்டு காட்டு கத்து கத்தினான் நானும் பயந்துபோய் தட்டு தடுமாறி வந்து பாத்தா எண்ட மருமோளும் உந்த கட்டேல போனவனும் சேந்து சிரிச்சு சிரிச்சு பாழாப்போன பாட்டை பாக்குதுகள் எனக்கு வந்த கோவத்துக்கு சுடலைக்கு போக எண்டு திட்டிக்கொண்டு திரும்பவும் படுக்க போட்டன் ஆனால் உவளவையிண்டை சத்தம் நிண்டபாடில்லை அதால என்ட நித்திரையும் குழம்பி போச்சுது சரி உதுகள் என்ன கதைக்குதுகள் எண்டுகொண்டு கொஞ்சம் காதை திருப்பினால் எதோ அசினோ பிசினோ எண்டோ கதைக்குதுகள் பிறகு அவளின்டை கண்ணை பாருங்கோ காலை பாருங்கோ எண்டு ஒரே வர்ணிப்புதான் உந்த துலைவாண்ட வயதுக்கு உவன் தண்ட தாயோட கதைக்கிற கதையை பாரன் எண்டு நினைச்சு கொண்டு கண்ணை மூடினால் நித்திரை வரமாட்டன் எண்டுட்டுது.

 
 சரி என்ன உந்த பிசினை பற்றி தான் உவன் தொடந்து கதைக்கிறான் எண்டுட்டு அதை கொஞ்சம் ஒளிச்சு நிண்டு பாப்பம் எண்டு  போய் பாத்தால்.... சும்மா சொல்லகூடாது உவன் சொன்னாதை விடவும் அவள் வடிவாத்தான் இருந்தாள் உண்ட வயசுக்கு உதெல்லாம் தேவையோ எண்டு உள்மனது கேட்டாலும் கொஞ்சநேரம் நிண்டு ரசிச்சு பாத்துகொண்டு நிக்க பாட்டுகள் முடிஞ்சு போய் உதுகள் படுக்க வெளிக்கிட்டுதுகள். எனக்கெண்டால் விட்டுட்டு போக மனமில்லை என்ன செய்ய ச்சீ சனியனுகளுக்கு இடி வந்து விழ எண்டு திட்டி கொண்டு போய் படுத்தால் உடன தித்திரை வந்திட்டுது.
 
திடீரெண்டு விடிய சாமமிருக்கும்.......... உந்த அசினோ பிசின் வந்து என்னை சொர்க்கத்துக்கு கூட்டிக்கொண்டு போட்டாள் அங்கை போய் எல்லாத்தையம் கழட்டி போட்டு அரை குறையோட என்னை கட்டி புடிச்சி ஒரு ஆட்டம் ஆடினாள் பாருங்கோ அது...அது...எண்ட வாழ்க்கேல நான் கண்டதில்லை கொஞ்ச நேரத்தில அவள் போயிட்டாள் எண்டு திடுக்கிட்டு எழும்பின பிறகுதான் தெரிச்சுது அது கனவெண்டு அட சனியன் எண்டு கனவை செல்லமா திட்டிக்கொண்டு படுத்தால் கொஞ்ச நேரத்தில விடிஞ்சுபோச்சு.
 
யோசிச்சு பாத்தன் அந்த நாளுகள்ள பக்கத்து வீட்டு கனகமும் மூண்டாம் வீட்டில இருந்த அன்னமும் கனவில வந்த பிறகு இப்ப இந்த கிழட்டு வயசில உவள் பிசின் தான் வந்திருக்கிறாள் சரிசரி தேத்தண்ணியை குடிப்பம் எண்டு தோஞ்சிட்டு வருவம் எண்டு போய் பிசினை நினைச்சுகொண்டே எல்லாத்தையும் முடிச்சுட்டு துவாயால துடைக்கேக்க தான் பாத்தன் நான் குளிச்சிருக்கிரனே தவிர தோயவில்லைஎண்டு ச்சீ இண்டைக்கும் மறந்து போச்சு எண்டு எனை நானே திட்டிக்கொண்டு வந்து தேத்தண்ணி குடிக்கேக்கிள்ள தான் யோசிச்சனான் உத எப்பிடி என்டாலும் எல்லாருக்கும் சொல்லிப்போட வேணும் எண்டு.
 
அதனால தான் உந்த உண்ணா விரதம் நடிப்பெல்லாம். சரி தலைப்பை (நீங்கள் வேற ஏதாச்சும் நினைச்சால் நான் பொறுப்பில்லை) 81 வயசு கிழவனின் கனவில வந்த அசின் எண்டு வைப்பம் எண்டு தான் நினைச்சனான் ஆனால் அதுகூட உந்த பிசினை நினச்ச உடன மறந்து போய் மாறி வந்திட்டுது . என்ன தான் இருந்தாலும் மறதி எண்டுறது எல்லாருக்கும் இருக்கிறதுதானே...... அதுசரி உந்த கிழட்டு வயசில மறதி ஒண்டும் பெரிசில்லை தானே எண்டு ஒருத்தரும் சொல்லகூடாது.....

2 Responses to “அசினின் கனவிலே வந்த 81 வயது கிழவன்”

அய்யா மறக்க வில்லை ,நீங்கள் மறைக்கவும் இல்லை. நான் கனவை தான் சொன்னேன்...நல்ல நகைச்சுவையுடன் கூறியுள்ளீர்கள்.

@ Madurai Saravanan

பேராண்டி இதில மறைக்க என்ன இருக்கு உவள் எண்ட பாடேல போன மருமோளிண்ட கூத்துகளை வெளியால சொல்லி போடோணும் இல்லாடி எண்ட மனசு வெடிச்சுபோடும். நீதாண்டா முதல்ல பின்னுக்கு ஊட்டியிருக்காய் அதுக்கு நன்றியடா அப்பிடியே நான் செத்தாலும் ஒருக்கா வந்து எண்ட பொடியை பாத்துபோடு

Post a Comment